அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது!
Apr 18, 2020 336 views Posted By : YarlSri TV
அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது!
உலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது.
கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்தாகின. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் இருந்து மீள போராடி வருகின்றன.
இந்த பதட்டம் எதுவும் இல்லாமல் ஐரோப்பிய நாடான பெலராசில் வழக்கம் போல பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. தற்போது நடக்கும் ஒரே கால்பந்து தொடர் என்பதால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா இல்லையா
95 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெலாரசில், கொரோனாவினால் 4200 பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் பலியாகினர். இருப்பினும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த வாரம் மின்ஸ்க், டைனமோ மின்ஸ்க் அணிகள் மோதிய போட்டியை காண 3000 ரசிகர்கள் திரண்டனர். தற்போது ரசிகர்கள் வருகை குறைந்து விட்டன.
தவிர வீரர்களும் கொரோனா பயத்தை வெளிப்படுத்தினாலும், தொடர் நடத்துபவர்கள் வருமானம் தான் முக்கியம் என்பதால் கண்டு கொள்ளவில்லை.
ஆன் லைன் ரசிகர்கள்
பெலாரஸ் கால்பந்து போட்டிக்கு நேரில் வராத ரசிகர்கள் 'ஆன் லைனில்' டிக்கெட் வாங்கலாம். இவர்களது முகத்தை, காலரியில் இருக்கும் 'கட் அவுட்டில்' ஒட்டி விடுவர். ரசிகர்கள் வீடுகளில் இருந்து போட்டி மற்றும் தங்கள் போட்டோவையும் பார்த்து ரசிக்கலாம்.
பெண்கள் பாவம்
பெலராஸ் பெண்கள் கால்பந்து தொடர் நேற்று துவங்க இருந்தது. ஆனால் வீராங்கனைகளில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதனால் இத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago