ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே.
Apr 18, 2020 384 views Posted By : YarlSri TV
ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே.
ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து அசத்தியுள்ளார் இந்திய கால்பந்து வீரர் ஜீஜே.
இந்திய கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜீஜே லால்பெகுலா 29. ஐ.எஸ்.எல்., தொடரின் சென்னை அணிக்காக விளையாடுகிறார். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பிற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் மிஜோரமில் தங்கியுள்ளார்.
இங்குள்ள அரசு சாராத 'யங் மிஜோ' சங்கத்தில் (ஒய்.எம்.ஏ.,) உறுப்பினராக ஜீஜே உள்ளார். மிஜோரமில் இயங்கி வரும் இது, வடகிழக்கு மாநிலங்களில் மிக பிரபலம். இக்கட்டான நேரங்களில் மக்களுக்கு உதவுவதில் ஒய்.எம்.ஏ., முன்னணியில் உள்ளது. இதனிடையே சைனோடு மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்து உதவியுள்ளார் ஜீஜே.
இதுகுறித்து அவர் கூறியது:
பொதுவாக மருத்துவமனையில் ரத்த 'யூனிட்' குறைந்து விட்டால் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்போது தேவையான ரத்த பிரிவு வகைகள் சரியாக கிடைப்பதில்லை. இதனால் மருத்துமனையில் இருந்து உதவிக்காக என்னை தொடர்பு கொண்டனர். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என உடனடியாக களமிறங்கினேன்.
ஏனெனில் இதுபோன்ற நேரத்தில் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. தகவல் கிடைத்த அடுத்த சிறிது நேரத்தில் நாங்கள் டர்ட்லாங் மருத்துவமனைக்கு விரைந்தோம். 33 பேர் வந்ததில் 27 பேர் ரத்தம் தருவதற்கு தகுதியாக இருந்தனர். இவ்விஷயத்தில் எனது பங்கு சிறியளவு தான். இருப்பினும் இது திருப்தியளிக்கிறது. இதற்கு தேவையான பலம் தந்த இறைவனுக்கு நன்றி.
இப்போதுள்ள சூழ்நிலை என்னைப் பற்றியோ அல்லது வேறு சிலர் குறித்தோ இல்லை. ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய தருணம் இது. நெருக்கடியான நேரத்தின் போது நமது பங்களிப்பை தர வேண்டும். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்பது முக்கியம் தான். எனினும் ரத்தத்தின் தேவையும் அவசியம். தொடர்ந்து வீட்டில் இருந்தால் இந்தியா, இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் மீண்டு விடும்.
இவ்வாறு ஜீஜே கூறினார்.
உயிர் காக்க உதவுங்கள்
ரத்த தானம் செய்த போட்டோவை 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஜீஜே கூறுகையில்,''ரத்த தானம் செய்யுங்கள், உயிர் காக்க உதவுங்கள்,'' என தெரிவித்துள்ளார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago