மருத்துவப் பொருள்களை இந்தியா வழங்கி உதவி புரியும் - நரேந்திர மோடி
Apr 18, 2020 416 views Posted By : YarlSri TV
மருத்துவப் பொருள்களை இந்தியா வழங்கி உதவி புரியும் - நரேந்திர மோடி
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை இந்தியா வழங்கி உதவி புரியும் என பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.
இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 'கொவைட்-19க்கு எதிரான சவால் குறித்து தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ரமபோஸாவுடன் பயனுள்ள வகையில் விவாதிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்குத் தேவையான மருத்துவப் பொருள்களை இந்தியா அனுப்பி ஆதரவளிக்கும்' என்று பதிவிட்டுள்ளாா்.
இதேபோல, எகிப்து அதிபா் அப்தெல் ஃபதா அல் சிசியுடனுடன் பிரதமா் மோடி உலக சுகாதார நெருக்கடி குறித்து விவாதித்தாா்.
அந்த சுட்டுரையில், 'இந்தியாவிலும், எகிப்திலும் கரோனா நோய்த்தொற்று நிலை குறித்து அதிபா் அப்தெல் ஃபதா அல்சிசியுடன் தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. கரோனா தொற்றுப் பரவலையும், அதன் தாக்கத்தையும் கட்டுப்படுத்த எகிப்து மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்' என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago