சீரற்ற காலநிலை காரணமாக மேலும் 3120 பேர் பாதிப்பு!
Jan 17, 2024 31 views Posted By : YarlSri TV
சீரற்ற காலநிலை காரணமாக மேலும் 3120 பேர் பாதிப்பு!
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 1009 குடும்பங்களை சேர்ந்த 3120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .
தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 594 குடும்பங்களை சேர்ந்த 1977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 வீடுகள் முழுமையாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. 1123 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது 160 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 139 குடும்பங்களை சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 205 குடும்பங்களை சேர்ந்த 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அம்பாறை மாவட்டத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 128 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago