Skip to main content

சிறுவனைக் கெளவிச் சென்ற முதலை; களனி கங்கையில் சம்பவம்!

Jan 17, 2024 31 views Posted By : YarlSri TV
Image

சிறுவனைக் கெளவிச் சென்ற முதலை; களனி கங்கையில் சம்பவம்! 

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போது பாட்டியைத் தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச் சென்ற முதலை ஒன்பது வயதுடைய  சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச் சென்றுள்ளது.



கடுவெல வெலிவிட்ட, புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் டிஸ்னா பெரேரா என்ற 9 வயது சிறுவனே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்



சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருந்ததனை தாம் கண்டதாக தெரிவித்துள்ளனர் .

சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர் .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை