Skip to main content

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கம் :அதிகளவான நோயாளர்கள் பதிவு!

Jan 16, 2024 27 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கம் :அதிகளவான நோயாளர்கள் பதிவு! 

இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. 



அதன்படி, நடப்பாண்டின் (2024) முதல் 15 நாட்களுக்குள், 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது (5,029) டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .



 மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.



ஆபத்தான  பிரதேசங்கள்

மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .



மேல் மாகாணதில்  அதிகளவான நோயாளர்கள் இருக்கின்றார்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது.



டெங்கு கட்டுப்பாட்டு வேலை  திட்டம் 

தவிரவும், நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை நாளை இன்று (16) வெளியிடப்படலாம் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை