சிறுவனை வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற நடன ஆசிரியர் ஒருவர் கைது!
Jan 15, 2024 32 views Posted By : YarlSri TV
சிறுவனை வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற நடன ஆசிரியர் ஒருவர் கைது!
நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு தெரிவித்து 12 வயது சிறுவனை வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது.
சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வகுப்பு முடிந்து வீடு சென்று கொண்டிருந்த சிறுவனை
பயிற்சி வகுப்பு முடிந்து வீடு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனை நடன ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்
தனது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க உதவுமாறு சிறுவனிடம் கோரியுள்ளார்.மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் நடன ஆசிரியர் சிறுவனின் கையை பிடித்து தனது அந்தரங்கப் பகுதிக்கு கொண்டு சென்று சிறுவனை வன்புணர்வு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கமராவில் பதிவாகி வீடியோ
சந்தேகநபர் சிறுவனுடன் பயணித்த விதம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், வீதியொன்றுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து அவர் எரிபொருள் பெற்றுக்கொண்டதாகவும்கூறப்படுகின்றது
அவ்விடத்தை விட்டு வெளியேறிய சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை வெறிச்சோடிய வீதியை நோக்கி செலுத்த முற்பட்ட நிலையில் அச்சமடைந்த சிறுவன் அலறியதால் அவரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் பிலியந்தலை காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து 27 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடன வகுப்பொன்றை நடத்தி பல சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடன ஆசிரியரின் பிரதான உதவியாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago