Skip to main content

ஜப்பான் நிலநடுக்கதில் சிக்கிய 90 வயது மூதாட்டி : 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டார்!

Jan 07, 2024 41 views Posted By : YarlSri TV
Image

ஜப்பான் நிலநடுக்கதில் சிக்கிய 90 வயது மூதாட்டி : 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டார்!  

ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் 126 பேர் பலியாகியுள்ள நிலையில், 124 மணி நேரத்திற்கு பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் வாழ்ந்துவருகிற மூதாட்டியே இவ்வாறு 5 நாட்களுக்குப் பிறகு நேற்று (06) மீட்கப்பட்டுள்ளார்.



இருப்பினும் நிலநடுக்கத்தின்போது கொதிநீர் பட்ட காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.



வீதி மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையும் பனிப்பொழிவும் இன்னும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிக்கலாக அமைந்துள்ளது.



இந்நிலையில் 200இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், விமானங்கள் மற்றும் படகுகள் மூலமான மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



ஜப்பானில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு வடகொரியா அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ஜப்பானுக்கு உதவி வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை