பொது நிகழ்ச்சிகளில் தனது மகளுடன் பங்கேற்கும் வடகொரிய அதிபர் : வெளியான காரணம்..!
Jan 06, 2024 36 views Posted By : YarlSri TV
பொது நிகழ்ச்சிகளில் தனது மகளுடன் பங்கேற்கும் வடகொரிய அதிபர் : வெளியான காரணம்..!
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தற்போது பொது நிகழ்ச்சிகளில் தனது மகளை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மகள் இருக்கிறார். இவர் தான் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார்.
பெயர் மற்றும் வயது
இவரது பெயர் மற்றும் வயது என்ன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இதில் தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவரது பெயர் கிம் ஷு ஏ என்று இருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது கிம் ஜாங் உன் தனது மகளுடன் தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராணுவ அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பிலும் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் தவறாமல் பங்கேற்கிறார்.
கிம் ஜாங் உன்னின் மகளை பார்க்கும் அதிகாரிகள் அவர் முன்பு மண்டியிட்டு வணங்குகின்றனர். இதுபற்றி தென்கொரியாவின் உளவுத்துறை சார்பில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு இந்த ஒரு குழந்தை மட்டுமின்றி இன்னும் குழந்தைகள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் குறித்த விபரம் எதுவும் வெளிவரவில்லை.
அரசியல் வாரிசு
தற்போதைய சூழலில் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் வர அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது.
மேலும் தற்போது கிம் ஜாங் உன்னிற்கு 40 வயது ஆகிறது. அவர் நலமாகவே இருக்கிறார். அவருக்கு எந்த உடல் நல பிரச்சனையும் இல்லை. இதனால் தற்போதைய சூழலில் அதிபர் மாற்றம் என்பது நிகழாது.
இருப்பினும் கிம் ஜாங் உன் தனது மகளை தனது அரசியல் வாரிசாக கருதி அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்'' என தென்கொரியாக அதிகாரிகள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago