வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கையர்கள்!
Jan 05, 2024 26 views Posted By : YarlSri TV
வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கையர்கள்!
இலங்கையில் இருந்து சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை புலம்பெயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சவூதி அரேபியாவில் சுமார் 6 இலட்சம் இலங்கையர்கள் வசிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து சென்றமைக்கான காரணம்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் காரணமாக பல தமிழர்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
அத்துடன், மேலும் சிலர் தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேலைவாய்ப்பை தேடி வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில், சிலர் குறித்த நாடுகளிலேயே குடியுரிமையை பெற்று கொண்டனர்.
இந்த பின்னணியில், தற்போது இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி நிலை, புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் வரிகள், மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் காரணமாக நாட்டிலிருந்து வெளியோருவரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் குடியேறிய இலங்கையர்கள்
ஆபிரிக்க கண்டத்தின் லிபியா, மொரீஷியஸ், சீஷெல்ஸ், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் புலம்பெயர் இலங்யைர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இந்தியா, ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் அதிகளவான இலங்கையர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கனடாவின் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் ஆகிய பகுதிகளில் அனைத்து இனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர் வருமானம் எவ்வளவு
பல்வேறு காரணங்களை முன்வைத்து இலங்கையை விட்டு வெளியேறிய நபர்கள், உலகின் பல பாகங்களிலும் தற்போது கல்வி மற்றும் தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றனர்.
இதற்கமைய, 2009 ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை புலம்பெயர் இலங்கையர்கள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் இந்த தொகை அதிகரிப்பதாகவும் இதன்படி, சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து பாரியதொரு தொகையை வருமானமாக ஈட்டிக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago