Skip to main content

மீண்டும் உக்கிரமடையும் உக்ரைன் ரஷ்யப்போர்..!

Jan 04, 2024 27 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் உக்கிரமடையும் உக்ரைன் ரஷ்யப்போர்..! 

கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்த நிலையில் நேற்றையதினம் உக்ரைன் மீது மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.



 அதாவது ரஷ்யா, தனது ஆயுத கிட்டங்கில் பலம் வாய்ந்த ஏவுகணையான கின்சால் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.



உயிரிழப்புகள் 

ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.



இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது .



இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவின் பெல்கோரட் பகுதி நோக்கி டிரோன் படையை உக்ரைன் அனுப்பியது. இருப்பினும் அதனை ரஷ்ய ராணுவத்தின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளன.



 ஏவுகணை

கின்சால் (Kh-47M2 Kinzhal) என்பது வான்வழி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும், இது அதன் விலை மற்றும் குறைந்த இருப்பு காரணமாக ரஷ்யப் படைகளால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.



நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், போர் தொடங்கியதிலிருந்து ஒரு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை