Skip to main content

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ராமர் கோவில் பிரச்சாரம் செய்ய திட்டம்: 303 இடங்களுக்கு அதிகமான வெற்றி இலக்கு நிர்ணயம்..!

Jan 04, 2024 27 views Posted By : YarlSri TV
Image

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ராமர் கோவில் பிரச்சாரம் செய்ய திட்டம்: 303 இடங்களுக்கு அதிகமான வெற்றி இலக்கு நிர்ணயம்..! 

பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் பிரதமர் மோடியை மையமாகக் கொண்டது. மோடி இந்துத்துவா, வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் குறியீடாக முன்வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்ய உள்ளது.



பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் பிரதமர் மோடியை மையமாகக் கொண்டது. மோடி இந்துத்துவா, வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் குறியீடாக முன்வைத்து அக்கட்சி பிரச்சாரம் செய்ய உள்ளது.



லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் தொடர்பான பிரச்சாரத்திற்கான மைக்ரோ-லெவல் திட்டத்தைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க பா.ஜ.க தலைமை செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது.



மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கு, உத்திகள், பிரச்சாரம், கையில் எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பா.ஜ.க மூத்த தலைவர்களின் உயர்மட்டக் குழு, அக்கட்சி தலைமையகத்தில் அன்று காலை கூட்டம் நடத்தியது.



இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைன்ஷ்னாவ் மற்றும் மன்சுக் மாண்டவியா, கட்சியின் பொதுச் செயலாளர்கள் சுனில் பன்சால், வினோத் தாவ்டே மற்றும் தருண் சுக் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இடம்பெற்றனர்.



தற்போதுள்ள திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிட கட்சி துணைக் குழுக்களை அமைக்கவும், இதற்கான அழைப்பு மையங்களை அமைக்கவும் குழு முடிவு செய்தது.



இந்த கூட்டத்தில், பா.ஜ.க-வின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள் மற்றும் வழிகளை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் கட்சி தற்போதுள்ள எண்ணிக்கையையும், வரவிருக்கும் தேர்தலில் வாக்குப் சதவிகிதத்தையும் மேம்படுத்த முடியும்.



2019 தேர்தலில் பெற்ற 303 இடங்களையும் 37.36% வாக்கு சதவிகிதத்தையும் தாண்ட பா.ஜ.க தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகம், பிரதமர் நரேந்திர மோடியை மையமாகக் கொண்டுள்ளது. அக்கட்சி பிரச்சாரத்தின் உந்துதலாக மோடியை “இந்துத்துவா, வளர்ச்சி மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் குறியீடாக இருப்பார்” என்று தெரிகிறது.



பிற்பகலில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களிடம் உரையாற்றினார் - பெரிய மாநிலங்களில் இருந்து நான்கு-ஐந்து தலைவர்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் இருந்து இரண்டு தலைவர்களிடம் - கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ராமர் கோயில் திறப்பு தொடர்பான கட்சியின் திட்டங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கினார்.



ராமர் கோயில் விவகாரத்தில் கொண்டாடவும், பிரச்சாரம் செய்யவும் இரண்டு வார நிகழ்ச்சிகளை பா.ஜ.க தயார் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தலைவர்கள் ஜனவரி 14 முதல் 27 வரை தங்கள் பகுதிகளில் உள்ள உள்ளூர் கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் கட்சி உறுப்பினர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதற்காக சிறிய குழுக்களை அமைத்து பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைக்கும் நாளான ஜனவரி 22-ம் தேதி மாலையில், ஒவ்வொரு வீட்டிலும் ‘ராம் ஜோதிஸ்’ என்று அழைக்கப்படும் ஐந்து தீபங்கள் ஏற்றி இந்நிகழ்வைக் தீபாவளி போல கொண்டாட வேண்டும் என பா.ஜ.க தொண்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



1989-ம் ஆண்டு முதல் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு கொண்டு வரப்பட்ட லட்சக்கணக்கான புனித செங்கற்கள், ராம் ஜோதிஸ் விளக்குகளை ஏற்றுவது ஒரு சூழ்நிலையை உருவாக்கும் மற்றும் நேர்மறையான உணர்ச்சிகளைத் தூண்டும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.



ஜனவரி 25 முதல் மார்ச் 25 வரை அயோத்தி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை ஏற்பாடு செய்து உதவுமாறு பா.ஜ.க தலைமை கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகு முதல் வாரத்தில் தினமும் சுமார் 50,000 யாத்ரீகர்கள் புதிதாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



“நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் பக்தர்களுக்கு பயணம், தங்குமிடம் மற்றும் பிற பிரச்சினைகளை எளிதாக்க வேண்டும்” என்று அக்கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார். மேலும், இது சம்பந்தமாக கட்சி தொண்டர்கள்  “ஆர்எஸ்எஸ் ஊழியர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றுவார்கள்” என்று கூறினார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியின் போது பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின் கொடிகளைப் பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.



மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பா.ஜ.க-வில் சேர்ப்பது குறித்து விவாதிக்க நட்டா மாலையில் கட்சியின் மூத்த தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்தினார்.



ஆளுங்கட்சிக்கு வலுவான அடித்தளம் இல்லாத தொகுதிகளில் மட்டுமின்றி, மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு மிக்க தலைவர்களை பா.ஜ.க தனது கூட்டணியில் சேர அழைக்கும். இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சியில் சேர்ந்தவர்களின் பட்டியலை சரிபார்க்க மூத்த தலைவர்களைக் கொண்ட குழுவை - இணைத்தல் குழு என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் குழுவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை