மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு ; தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகை..!
Jan 04, 2024 37 views Posted By : YarlSri TV
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடு ; தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகை..!
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு வர உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும்.
இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் ஜனவரி 7,8-ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய உள்ளனர்.தொடர்ந்து ஜனவரி 9,10-ம் தேதிகளில் ஆந்திராவில் ஆய்வு செய்கின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த பின் மார்ச் 10-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago