Skip to main content

விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்: கனடாவில் சம்பவம்!

Dec 30, 2023 35 views Posted By : YarlSri TV
Image

விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்: கனடாவில் சம்பவம்! 

கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் 8 மற்றும் 2 விமானிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.



குறித்த விபத்தானது, கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் நடந்துள்ளது.



அத்தோடு, எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என  தெரிய வருகின்றது .



மீட்பு நடவடிக்கை

இந்நிலையில், விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேவேளை, விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடன் செயற்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



மேலதிக விசாரணை

அத்துடன், விபத்தினால் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்தானது, விமானத்தை தரையிறக்குவதற்கு தாயாராகும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை