Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்!

Dec 29, 2023 38 views Posted By : YarlSri TV
Image

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்! 

 



இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக,அந்நாட்டு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் அறிவித்துள்ளார் .



 பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,



'போரின் காரணமாக நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்





வன்முறையில் ஈடுபடுகிறார்கள்

அதனால்,எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.



மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறுகின்ற இந்தப் போரில் இஸ்ரேல் மனிதாபிமானமின்றி வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும்,



எல்லை மீறி செயற்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மூன்றாவது முறையும் உதவி

இந்தப் போரினால் இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .



பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காசாவிற்கு அனுப்பியுள்ளது, மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளது என்பதையும் அவர் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை