அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
May 05, 2024 290 views Posted By : YarlSri TV
அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை குவித்து அசத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
தான் விளையாடிய முதல் 8 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது பாயின்ட்ஸ் டேபிளில் 8 புள்ளிகள் மற்றும் -0.049 நெட் ரன் ரேட்டுடன் பெங்களூரு அணி பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆம் இடத்தில் உள்ளது.
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், இன்னமும் ஆர்சிபிக்கு அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு ஆர்சிபி அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
அடுத்ததாக 12 புள்ளிகளை தற்போது வைத்திருக்கும் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகளில் ஒன்று மீதமுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் மீதமுள்ள போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற வேண்டும். பஞ்சாப் அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 3 இல் வெல்ல வேண்டும்.
இவை நடந்தால் ஆர்சிபி, சென்னை, டெல்லி, லக்னோ, ஐதராபாத், பஞ்சாப் அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்.
இவற்றில் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. அதாவது இந்த அடிப்படையில்தான் ஆர்சிபி ப்ளே ஆஃப் முன்னேற வழி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago