Skip to main content

சொக்லேட் உறைகளில் இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

Mar 04, 2024 15 views Posted By : YarlSri TV
Image

சொக்லேட் உறைகளில் இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்! 

கட்டுநாயக்க விமான நிலையதில்  ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, இந்தக் கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .



கிரிபத்கொட பகுதியில் சொகுசு காரொன்றை சோதனையிட்ட போது, சொக்லேட் உறைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் கூறுகின்றனர் .



மேலதிக விசாரணைகளின் போது, 



கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான வத்தளை மற்றும் கணேமுல ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் தொடர்பிலான தகவல்களும்  கிடைத்துள்ளன.



தற்போது துபாயில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளான நிபுன மற்றும் நந்தசேன ஆகியோரின் அறிவுறுத்தலிலேயே, இவ்வாறு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை