Skip to main content

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றம்!

Mar 02, 2024 36 views Posted By : YarlSri TV
Image

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றம்!  

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01)  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா அறிவித்துள்ளார். 



அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.  



கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம்  விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக உயிரிழந்த சாந்தனின் உடல், நேற்றையதினம் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.



அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.



விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை