ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு!
Feb 06, 2024 53 views Posted By : YarlSri TV
ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு!
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து வரும் சூழலில் இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தேர்தலை கூட்டணி அமைத்துதான் சந்திப்போம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி இருந்த நிலையில், கூட்டணி தொடர்பாக தற்போது வரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எந்த அணியில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என பா.ம.க. தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணியை ஒருங்கிணைக்க ஜி.கே.வாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க. போட்டியிட்டது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago