Skip to main content

மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு!

Feb 02, 2024 33 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு! 

கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.



 ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.



இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அறிவிப்பு  விடுக்கப்பட்டுள்ளது.



 கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால்  உயிரிழந்தார்.



இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு,  ஏட்பாட்டுக்குழுவினரால் புதிய திகதி வெளியிடப்படுள்ளது 



 இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.



இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு வெளியிடப்படுள்ளது 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை