Skip to main content

அரசுக்கெதிராக வீதியில் இறங்க தயார் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

Nov 04, 2023 23 views Posted By : YarlSri TV
Image

அரசுக்கெதிராக வீதியில் இறங்க தயார் தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு 

 



நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.



தற்போதைய அரசுக்கு எதிராக மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என்பதுடன் நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.



தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டிய தயாசிறி ஜெயசேகர எதிரணிகள் ஒன்றிணைந்து பொதுத்திட்டமொன்றை உருவாக்காவிட்டால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது. .



தற்போதைய அரசால் இனியும் முடியாது. அதனால்தான் பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கு ஒன்றுபட வேண்டும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. இதற்காக என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை