Skip to main content

ஆபத்தான நபரைக் கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Nov 03, 2023 22 views Posted By : YarlSri TV
Image

ஆபத்தான நபரைக் கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார் 

கொழும்பில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.



கடந்த 8ஆம் மாதம் 5ஆம் திகதியன்று வாடகை அடிப்படையில் காரை  எடுத்துக் கொண்டு கடவத்தை அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல வரைக்கும் பயணித்த வேகன் ஆர் ரக காரை இருவர் கொள்ளையடித்துள்ளனர்.  



சாரதி மயக்கமடைந்த பின்னர் வாகனத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை தொடக்கியுள்ளனர் 



அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் புகைப்படங்கள் மற்றும் வரைந்து எடுக்கப்பட்ட புகைப்படமும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை