இலங்கையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!...
Nov 02, 2023 28 views Posted By : YarlSri TV
இலங்கையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!...
இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். திரிகோணமலை சென்ற அவர், அங்கு எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை கொண்டதாகவும், இலங்கையில் சுமார் 159 ஆண்டுகள் சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த எஸ்பிஐயின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியின் போது, SBI வங்கி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் எஸ்.தொண்டமான்.இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, எஸ்பிஐ வங்கி சேர்மன் தினேஷ்காரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago