மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்
Oct 18, 2023 55 views Posted By : YarlSri TV
மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்
காசா நகரில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நேற்றிரவு(17) மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளர்கள் என பலரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெற்கு காசாவிற்கு இடம்பெயர முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த நாட்களில் இந்த வைத்தியசாலையை அண்மித்து தங்கியுள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலின் இந்த தாக்குதல் யுத்த குற்றமாகும் என ஹமாஸ் குற்றஞ்சுமத்தியுள்ளது.
நோயாளர்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியன தெரிவித்துள்ளன.
மேலும் ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யாவுடன் இணைந்து இன்று(18) ஐ.நா பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago