வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் விசாரணை
Oct 17, 2023 55 views Posted By : YarlSri TV
வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் விசாரணை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குள், வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலஹா மற்றும் களுத்துறை மத்திய நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணித்தியாலங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தநிலையில், அதனை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago