Skip to main content

யாழில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி

Oct 16, 2023 41 views Posted By : YarlSri TV
Image

யாழில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி 

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



அண்மையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு 50இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளதுடன் அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.



பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு  தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் காவல்துறையினர்  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.



யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில்  சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளமை தொடர்பில் காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.



அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இருவரைக் கைது செய்து சனிக்கிழமை (14)  நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.



அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் , சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என காவல்துறையினரைப்  பணித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை