அம்மா வேண்டாம்னு சொன்னாங்க..அதுனால நிறுத்திட்டேன் : விஜய்
Dec 24, 2023 25 views Posted By : YarlSri TV
அம்மா வேண்டாம்னு சொன்னாங்க..அதுனால நிறுத்திட்டேன் : விஜய்
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகராக வலம் வருகின்றார் விஜய். தற்போது லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார் தளபதி. வெங்கட் பிரபு மற்றும் விஜய்யின் வித்யாசமான புது காம்போவில் தளபதி 68 திரைப்படம் உருவாவதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
லியோ படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்த விஜய் தளபதி 68 படத்தின் மூலமும் நடிப்பில் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. தற்போது வந்த தகவலின் படி தளபதி 68 படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரம் விஜய் இதுவரை நடித்திராத பாத்திரமாக இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய் தனக்கு பிடித்தமான ரோல்கள் பற்றி பழைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது விஜய்க்கு நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆரம்பகாலகட்டத்தில் ப்ரியமுடன் போன்ற படங்களில் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தாராம்.
அப்படம் வெற்றி பெற்றாலும் தன் அம்மாவிற்கு நெகடிவ் ரோலில் நடிப்பது பிடிக்கவில்லையாம். நெகட்டிவ் ரோலில் நடித்தால் உன் படத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் விரும்பி பார்ப்பது கஷ்டம். உன்னை பாசிட்டிவான ஹீரோ ரோலில் பார்ப்பது தான் என் ஆசை என ஷோபா சந்திரசேகர் விஜய்யிடம் கூறியுள்ளார். எனவே விஜய் அதன் பிறகு நெகட்டிவ் ரோலில் நடிக்கவே இல்லையாம்.
ரஜினி மற்றும் சத்யராஜ் ஒரு சில படங்களில் நெகடிவ் ஷேட் கலந்த ஹீரோவாக நடித்திருப்பார்கள். அதுபோல தான் விஜய்க்கும் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. ஆனால் தன் தாய் ஷோபா சந்திரசேகருக்கு நெகடிவ் ரோல்ஸ் பிடிக்காது என்பதால் விஜய் அதுபோல கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago