Skip to main content

ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.

Dec 21, 2023 29 views Posted By : YarlSri TV
Image

ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு. 

சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பயணியின் உறவினர்களுக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.



டெல்லி மெட்ரோ இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், பெண்ணின் குழந்தைகளின் கல்வியையும் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.



 மெட்ரோ இரயில்வே (உரிமைகோரல் நடைமுறை) விதிகள், 2017ன் படி, இறந்தவரின் உறவினர்கள் ₹5 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இறந்த பெண்ணின் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவியாக, கூடுதலாக ₹10 லட்சம் வழங்கப்படும். குழந்தைகள் இருவரும் மைனர்கள் என்பதால், அந்த தொகையை வழங்குவதற்கான சட்ட வழிமுறைகளை வகுப்பதில் தற்போது டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை