Skip to main content

தாக்குதலில் நடந்த தற்செயலான சம்பவம் என்கிறது இராணுவம்!

Dec 16, 2023 29 views Posted By : YarlSri TV
Image

தாக்குதலில் நடந்த தற்செயலான சம்பவம் என்கிறது இராணுவம்! 

இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



காஸாவின் ஷஜாயாவில் நடந்த தாக்குதலில் தற்செயலாக மூன்று பணயக்கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த சம்பவம் குறித்து வருந்துவதாகவும் இப்படியான தவறுகள் நடக்காமல் கவனமாக இருப்போம் எனவும் இஸ்ரேலிய வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.



இராணுவ தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இஸ்ரேலின் கெஃபர் அசா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்றாவது நபரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.



இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கியது. அன்றிலிருந்து இரு தரப்பிலும் பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.



ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் நோக்கில் இஸ்ரேல் காஸா மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிது.



இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 ஆயிரத்து 700 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.



தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை