Skip to main content

கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது!

Dec 13, 2023 27 views Posted By : YarlSri TV
Image

கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது! 

மலேசியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் திகதிக்கும் டிசம்பர் 2ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட கோவிட் தொற்று இருமடங்காக அது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த வாரத்தில் கோவிட்-19 தொற்று 3 ஆயிரத்து 626 ஆக இருந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



கோவிட்-19 தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் உட்பட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது ஒரு லட்சம் பேருக்கு மூவர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.8 வீதம் எனவும் கூறப்பட்டுள்ளது.



அதேவேளை ஆபத்தான நிலையில் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏனைய நோயாளிகளின் எண்ணிக்கை 1.1 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுவரை மலேசியாவில் புதிய கோவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் உள்நாட்டில் பரவும் திரிபுகள் அதிகம் தொற்ற கூடியவை அல்லது தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கானஅறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் மலேசிய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை