மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா வழக்கு!
Dec 12, 2023 34 views Posted By : YarlSri TV
மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா வழக்கு!
மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் எழுந்தது.
இது தொடர்பில் போலீசார் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திரிஷா சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக்கூறி நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
திரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்ததாகவும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக இருக்கும்போது எதற்காக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த மனுவுக்கு நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago