இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து!
Dec 11, 2023 29 views Posted By : YarlSri TV
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் இந்தியா-தென் ஆபிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெறவிருந்த நிலையில் மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி, ராகுல், பும்ரா, ஷமி ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி டி20 தொடரில் ஆட உள்ளது.
இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சிஎஸ்கே அணியை சேர்ந்த ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தாலும் எந்த ஒரு போட்டியிலும் அவர் களமிறங்காதது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஷிவம் துபே தேர்வு செய்யப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சிவம் துபேவை இந்தியா தேர்வு செய்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் தற்போது தென் ஆபிரிக்காவிற்கு எதிராக 17 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் அளிக்கவில்லை. இதை ஒரு வீரருக்கு எவ்வாறு தெரிவிப்பது?என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago