பறிகொடுத்த பன்னீர்... திக்குத் தெரியாத சசி... வேட்டுவைத்த டி.டி.வி...
Nov 11, 2023 16 views Posted By : YarlSri TV
பறிகொடுத்த பன்னீர்... திக்குத் தெரியாத சசி... வேட்டுவைத்த டி.டி.வி...
தினகரன் - பன்னீர் இடையே நடைபெறும் மறைமுக மோதலில், சத்தமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார் சசிகலா. “அவரைத்தான் ஆட்டத்துல யாரும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்களே...” எனப் புலம்புகிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.
அ.தி.மு.க என்கிற இயக்கத்தோடு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருந்த கடைசித் தொடர்புகளிலும் பட்டாசைக் கொளுத்திப்போட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் என எதையும் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை ஆணை போட்டிருக்கிறது நீதிமன்றம். தடையை எதிர்த்து பன்னீர் மேல்முறையீடு சென்றிருக்கிறார். “ஹீரோ முதலில் வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பான். கடைசியில், ஒரே அடி... வில்லன் அவுட் ஆகிவிடுவான்” என நீதிமன்றத்தின் தடை ஆணைக்குப் பின்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் பன்னீர் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம். ஆனால், “இன்னும் எவ்வளவு நாளைக்கு அடி மட்டுமே வாங்கிக்கொண்டிருப்பது... வலிக்குதுல்ல...” என்பதுதான் அவர் அணியைச் சேர்ந்தவர்களின் குமுறலாக இருக்கிறது!
“இந்த வழக்கில் மட்டுமல்ல, டி.டி.வி.தினகரனை நம்பியும் மோசம் போய்விட்டார் ஐயா. தேனி நாடாளுமன்றத் தொகுதியை மையப்படுத்தி இருவருக்குமிடையே பெரும் சச்சரவு வெடித்திருக்கிறது. ‘பன்னீர் எங்க கட்சிக்காரர்தானே, எப்போது வேண்டுமானாலும் அவர் என்னைச் சந்திக்கலாம்’ எனச் சொன்ன சசிகலா, எந்தக் கட்சியில் இருக்கிறார் எனத் தெரியவில்லை.
அவர் நிலையே திக்குத் தெரியாமல் அல்லாடுகிறது. ‘கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும்’ என நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைத்த வாதத்தால், மன்னார்குடி வகையறாக்கள் ஓ.பி.எஸ் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை. ஏகக் குழப்பங்கள் நிலவுவதால், இந்த தீபாவளியைக் கொண்டாடும் மனநிலையிலேயே நாங்கள் யாரும் இல்லை” என மத்தாப்பூக்கூட கொளுத்த முடியாத சோகத்தில் உழல்கிறார்கள் பன்னீர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள். பன்னீர் - டி.டி.வி - சசி... ‘இந்த முக்கோண அரசியலில் என்னதான் நடக்கிறது... பன்னீரின் திட்டம்தான் என்ன..?’ களமிறங்கி விசாரித்தோம்...
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago