Skip to main content

தீபாவளி பண்டிகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 490!..

Nov 08, 2023 28 views Posted By : YarlSri TV
Image

தீபாவளி பண்டிகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 490!.. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக ரூபாய் 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.



இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக ரூபாய் 490 வழங்கப்படும் எனப் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்குப் பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூபாய் 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி சுமார் 3 இலட்சத்து 37 ஆயிரம் பயனாளிகளுக்கு, தலா ரூபாய் 490 வழங்கப்பட உள்ளது. இதற்கு 16 கோடியே 53 இலட்சம் ரூபாயைப் புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளது.



இதற்டையே, புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து முதலமைச்சர் இரங்கசாமி உத்தரவிட்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை