பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறை...! கண்டனம் தெரிவித்தார் எம்.பி கஜேந்திரகுமார்
Nov 06, 2023 32 views Posted By : YarlSri TV
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறை...! கண்டனம் தெரிவித்தார் எம்.பி கஜேந்திரகுமார்
ல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கன்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நேற்றையதினம் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்புபேரணி மற்றும் போராட்டத்தின் பின்னர் அவர்களை பொலிஸார் கைது செய்த நிலையில் செங்கலடி சந்தி வெளி பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் திரளக் கூடாது என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த இந்த முயற்சியை ஏதோவொரு வகையில் அந்த மாணவர்களை பயப்பீதிக்குள் தள்ளி அவர்களை தொடர்ந்தும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் செய்வதற்கான சதியாகவே இதனை பார்ப்பதாகவும் இச் சம்பவத்தை பாராளுமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
அத்துடன், போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதென்பது அவற்றைத் தடுப்பதற்காக அல்ல. மாறாக பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாது அவர்களை வழிப்படுத்துவதற்காகும். அவ்வாறான நிலையில்,பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுத்த போராட்டப் பேரணியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை திட்டமிட்டதாகும்.
மேலிடத்து உத்தரவின்றி அவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை, எனவே இவ்விதமான பொலிஸாரின் அடக்குமுறைகளை கண்டிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago