Skip to main content

சபரிமலையில் புதிய நடைமுறை!..

Nov 05, 2023 46 views Posted By : YarlSri TV
Image

சபரிமலையில் புதிய நடைமுறை!.. 

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.



இந்த திருக்கோவிலுக்குக் கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.



பக்தர்கள் பலரும் தங்களது வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்த நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் ‘பாஸ்டேக்’ உடன் தற்போது இணைக்கப்பட உள்ளது.



‘பாஸ்டேக்’ மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10-ம் தேதி நிலக்கல்லில் சுங்கச்சாவடி திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை