மீனவர் சடலமாக மீட்பு
Nov 05, 2023 31 views Posted By : YarlSri TV
மீனவர் சடலமாக மீட்பு
புத்தளம் - உடப்பு களப்பில் இருந்து மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
முந்தல் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா, புளிச்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று வெள்ளிக்கிழமை (03) மாலை 6 மணியளவில் உடப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவ்வாறு வீட்டைவிட்டு வெளியேறிய குறித்த மீனவர் சனிக்கிழமை (04) வரை வீடு திரும்பவில்லை எனவும், இதுதொடர்பில் குடும்பத்தினர் முந்தல் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு உடப்பு களப்பு பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த சிலர் அதுபற்றி உடப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறி உடப்புக்கு சென்ற புளிச்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago