Skip to main content

கிளிநொச்சியில் மருமகனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்

Apr 05, 2023 62 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சியில் மருமகனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்  



கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியதில் மருமகன் உயிரிழந்துள்ளார்.



பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார். 



இதன்போது இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதனால் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 



சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் (வயது 34)  2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை