பாரிய விசா மோசடி தொடர்பில் ஒருவர் அதிரடி கைது
Mar 30, 2023 72 views Posted By : YarlSri TV
பாரிய விசா மோசடி தொடர்பில் ஒருவர் அதிரடி கைது
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு ஒன்றில் பிரதானியாக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்த கண்டி வீசா மையத்தின் இணையத்தளத்தில் இரகசியமாக நுழைந்து இந்த மோசடியை செய்துள்ளார்.
சந்தேகநபர், பாரியளவிலான மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் மூலோபாய நிபுணர் ஒருவர் சந்தேக நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வீசாவைப் பெறுவதாக கூறி அவரிடம் சிறிது நேரம் உரையாடி அனைத்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறி்த்த சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள சந்தேகநபர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்தள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago