கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
Mar 26, 2023 62 views Posted By : YarlSri TV
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடி குண்டு!! சிறுவனின் விபரீத விளையாட்டு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பிரிவில் குண்டு ஒன்று உள்ளதாக கையடக்கத் தொலைபேசி ஊடாக தகவல் அளித்த 14 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த பொலிஸார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
நேற்று (25) மாலை குறித்த மாணவன் விமான நிலைய அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அங்கு குண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதற்கமைய உடனடியாக பொலிஸார் குறித்த விமான நிலைய பகுதியை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் அழைப்பெடுத்து தான் கேலிக்காக அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து களுபோவில பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்து, வாக்கு மூலம் ஒன்றினை பெற்ற பின்னர் கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1505 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1505 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1506 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1506 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1506 Days ago