Skip to main content

காலாவதியான பொருட்களை விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!

Oct 25, 2022 68 views Posted By : YarlSri TV
Image

காலாவதியான பொருட்களை விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்! 

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இன்று களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவு விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.



இதன்போது கலாவதியான பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளை மீறிய வகையில் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.



இதேநேரம்  தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள காரணத்தினால் நுளம்பு பெருகாவண்ணம் தமது சுற்றாடல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஞானராஜா சஞ்ஜய் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை