போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது!
Aug 24, 2023 38 views Posted By : YarlSri TV
போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது!
போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் விமான நிலையத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான இவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவரது கனேடிய விசா தொடர்பில் சந்தேகமடைந்த விமான அதிகாரிகள், அவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த விசா மோசடியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குடிவரவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago