Skip to main content

ந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது!

Aug 24, 2023 79 views Posted By : YarlSri TV
Image

ந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது! 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்றைய தினம் (23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 



40 நாட்கள் பயணத்தின் பின்னர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. 



சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.



இதனையடுத்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து விக்ரம் லேண்டர் மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது



சந்திராயன்-3 தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் நான்காவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.



நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.  



இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.



இவ் வெற்றிகரமான சாதனை தொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை