விஜயின் லியோ படம் குறித்து முக்கிய தகவலை கூறிய தயாரிப்பாளர்...!
Aug 22, 2023 39 views Posted By : YarlSri TV
விஜயின் லியோ படம் குறித்து முக்கிய தகவலை கூறிய தயாரிப்பாளர்...!
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங் 125 நாட்களில் நிறைவுப்பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் பாடல் வெளியீட்டு விழாவை அக்டோபர் ஐந்தாம் தேதி மலேசியாவில் நடத்த படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக தயாரிப்பாளர் லலித் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் மலேசியா சென்று அதற்கான இடங்களை தேர்வு செய்தனர். இந்த நிலையில் லியோ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ள தனியார் தொலைக்காட்சி அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் தொலைக்காட்சி நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பின்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவது என்றும், அதற்கான தேதியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படம் குறித்து பேசியுள்ளார். அதில், விஜயின் நடிப்பு கெரியரில் லியோ படம் தான் சிறந்த படமாக இருக்கும் என்றும், படத்தின் இடைவேளைக்கு முந்தைய 8 நிமிடங்கள் வெறலெவல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago