மகாராஷ்டிராவில் அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
Apr 17, 2023 84 views Posted By : YarlSri TV
மகாராஷ்டிராவில் அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று(16) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட 11 பேர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.
திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவில் அந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பகுதியில் நேற்று(16) அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.
இதன்போது அதிக வெப்பம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் துர்திஷ்டவசமானது எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்..
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago