Skip to main content

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

Sep 23, 2022 61 views Posted By : YarlSri TV
Image

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்! 

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 53 ஆவது நாள் போராட்டமாகவே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.



இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் என்றும் தங்கள் நிலம் தமக்கு வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



மேலும் நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோஷங்களை எழுப்பியவாறும் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை