Skip to main content

அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் திருகோணமலையில் போராட்டம்!

Sep 21, 2022 82 views Posted By : YarlSri TV
Image

அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் திருகோணமலையில் போராட்டம்! 

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 51 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.



வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் 51 ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் இடம்பெற்றது.



இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோசங்களை எழுப்பியவாறு தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன் வைத்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை