அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் திருகோணமலையில் போராட்டம்!
Sep 21, 2022 82 views Posted By : YarlSri TV
அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் திருகோணமலையில் போராட்டம்!
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 51 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் 51 ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் இடம்பெற்றது.
இப் போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை என கோசங்களை எழுப்பியவாறு தங்களின் உரிமை கோரிக்கையினையும் முன் வைத்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago