திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? – சுகாதார அமைச்சு விளக்கம்!
Sep 21, 2022 75 views Posted By : YarlSri TV
திரிபோஷாவில் நச்சுத் தன்மை உள்ளதா? – சுகாதார அமைச்சு விளக்கம்!
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இதனையடுத்துஇ இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்தோடு நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவித்தார்!
-
இலங்கையில் மின் விநியோகத் தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
-
தீங்கு விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago