ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும் நேட்டோவின் புன்னகையும்
Jun 12, 2022 174 views Posted By : YarlSri TV
ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும் நேட்டோவின் புன்னகையும்
உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான தினம் முதலாக, ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளப் போகிறதென தொடர்ந்தும் பொருளாகவே இருந்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த மூன்றாவது நாள், அதாவது 2022 பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தனது முதலாவது அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்ததுடன், ரஷ்யாவின் அணு குண்டுத் தாக்குதல் பிரிவை அதிஉச்ச தயார் நிலையில் இருக்குமாறு தான் பணிப்புரை விடுத்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.
அதுமாத்திரமல்ல, ரஷ்யாவின் நடவடிக்கை விடயத்தில் வேறு எந்த நாடாவது சம்பந்தப்பட்டால் தங்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படும் என பகிரங்கமாகவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
யுத்தத்தை முடிந்தவரை ரஷ்யா தவிர்க்கவே விரும்புகிறது
ஒரு அணு ஆயுத யுத்தம் ஏற்படும் சாத்தியம் இருப்பதையும், அந்த யுத்தத்தை முடிந்தவரை ரஷ்யா தவிர்க்கவே விரும்புவதாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேற்குலகம் நேரடியாக தலையீடு செய்தால், அணு ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா தயங்காது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.
ரஷ்ய தரப்பின் அணு ஆயுத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள், பிரித்தானியா மீது எப்படியான தாக்குதல்களை மேற்கொள்ளும் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அழிவு - விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?
ரஷ்யாவினால் ஒரு அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள முடியுமா? அப்படி ரஷ்யா ஒரு அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளுமாக இருந்தால் எப்பொழுது அது சாத்தியமாகும்?
அப்படி ஒரு தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் பட்சத்தில் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளும்? அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதன் அழிவு - விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருக்கின்றோம்,
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago