ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பலி
Jun 04, 2022 83 views Posted By : YarlSri TV
ரஷ்யாவிற்கு எதிரான போரில் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் பலி
உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து தனி நபர் ஒரு போராளியாக முன்வந்தார்.
"உக்ரைனில் நடந்த சண்டையில் பிரெஞ்சுக்காரர் ஒருவர் படுகாயமடைந்தார் என்ற சோகமான செய்தி எங்களுக்கு கிடைத்தது" என்று செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் வெற்றிபெறும்
இதேவேளை, ரஷ்யாவால் தொடங்கப்பட்ட போரில் உக்ரைன் வெற்றிபெறும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக தெரிவித்தார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கி இன்று 100வது நாளில் ரஷ்ய துருப்புக்கள் டான்பாஸ் பிராந்தியத்தைத் தாக்கிவருகிறது.
பிப்ரவரி 24 அன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர் மற்றும் நகரங்கள் இடிபாடுகளாக மாறிவிட்டன.
போரில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை உக்ரைனிய படைகள் கடுமையாக போராடி தலைநகரைச் சுற்றி இருந்து ரஷ்யர்களை விரட்டியது. இந்நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு விடியோவை வெளியிட்டார் .
அதில், "எங்கள் அணி மிகவும் பெரியது. உக்ரைனின் ஆயுதப் படைகள் இங்கே உள்ளன. மேலும் மிக முக்கியமானது என்னவென்றால், எங்கள் நாட்டின் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். ஏற்கனவே 100 நாட்களுக்கு உக்ரைனைப் பாதுகாத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago